Tuesday, July 04, 2006

--------

காமராஜ் - 101 [ # 52 ]

காமராஜ் முதலமைச்சராக பொறுப்பேற்ற நேரத்தில், ஒருபுறம் பஞ்சத்தின் கொடுமை, பசி பட்டினி அவலங்கள், மற்றொருபுறம் கல்வியின்மையும், வேலையில்லா திண்டாட்டமும் தாண்டவமாடியது. எனவே பசியற்ற நிலையை உருவாக்குவதே நமது நோக்கம் என்றார்.

"நம்முடைய நோக்கம் என்ன? யாரும் இந்த நாட்டிலே சாப்பாட்டுக்கு இல்லையே என்று இருக்க கூடாது. இது நியாயம்தானே. ஏன் உலகத்திலேயே சாப்பாட்டுக்கு இல்லையே என்று யாரும் இருக்க கூடாது. நம்முடைய நாடு சாப்பாட்டுக்கு கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த நிலைமையை மாற்ற வேண்டாமா? இதை மாற்ற வேண்டியது நம்முடைய அடிப்படையான தேவையல்லவா?"

சாதாரண ஏழை எளிய மக்களின் வாழ்கைத் தரத்தை உயர்த்துவதுதான் தம்முடைய ஆட்சியின் கொள்கை என்பதை தனக்கே உரிய முறையில் காமராஜ் கீழ்கண்டவாறு கூறினார்.

"நான் வரும்போது கிராமத்தில் ஒரு பையன் குச்சியை வைத்துக் கொண்டு மாடு மேய்க்க போய்க் கொண்டிருந்தான். நான் கேட்டேன், ஏண்டா பள்ளிக்கூடம் பள்ளிக்கூடம் போகவில்லையென்று. கஞ்சித் தண்ணிக்கே வழியில்லை என்கிறான். அவனுக்கு சாப்பாடு இருந்தால், அவன் பள்ளிக்கூடம் போட மாட்டானா என்ன? அவன் அப்பன், அம்மாவுக்கு தன் பையனை பள்ளிகூடத்திற்கு அனுப்பி படிக்க வைக்க வேண்டுமென்ற ஆசையிருக்காதா என்ன?. நான் கேட்டேன், சம்பளம் நீ கொடுக்க வேண்டியதில்லை, மதியானம் சோறு வேறு போடுகிறோம், நீ ஏன் பள்ளிக்கூடத்திற்க்கு போக கூடாதென்று? அவன் சொல்லுகிறான், சட்டை இல்லை. சட்டை வாங்க பணமில்லை என்கிறான். சட்டை போடாமல் போனால் அங்கே சின்னப் பையன்களெல்லாம் கேலி செய்வார்களாம். ஒரு சட்டை வாங்க பணமில்லை அவனுக்குத்தான் பண்மில்லையே என்று அப்படியே விட்டுவிடலாம் இல்லையா? அவனுக்கு ஏதாவது வழி பண்ண வேண்டாமா? இல்லையா? இல்லை அப்படியே விட்டுவிடலாமா?

நீ மாடு மேய்க்கத்தான் பிறந்தாய், உன் தலையெலுத்து அப்படித்தான் இருக்கிறது என்னு சொல்லி விட்டுவிடலாமா? இது எப்படி நியாமென்று கேட்கிறேன். அது அப்படித்தான் என்றால், அவன் பெரியவன் ஆனதும் என்ன சம்பாதித்து விடுவான்? காலமெல்லாம் மாடு மேய்ப்பான் , காட்டுக்கு காவல் போவான், கையிலே கம்பு வைத்துக் கொண்டு உடம்பிலே கொஞ்சம் வழுவிருந்தால் வம்புச் சண்டைக்கு போவான்.

ரோடிலே போகிறவன், வருகிறவன், மண்டையெல்லாம் உடைப்பான், இப்படி மண்டையை உடைத்து மிரட்டியே பணம் சம்பாதிப்பான். அப்படி ஆள் இருக்காங்க சண்டிட்தனம் பண்ணி மிரட்டி சம்பாதிக்கிறது தான் அவர்கள் வேலை. நம்க்கும் இரண்டு ஆள் வேண்டியிருக்கிறதில்லை? அவனை வையவிட? இவனை வையவிட? இப்படியே அவன் வளர்ந்து விடுகிறான். இது ஆபத்து இல்லே? ஊரிலே சண்டித்தனம் பெருத்திட்டா ரொடிலே போக முடியுமா என்ன? தடிக்கம்பை கையில் எடுத்துக்கொண்டு கலகம் பண்ணுவான். இதனாலே சமுதாயம் கெட்டுப்போகிறது.

அது மாதிரி நிலைமைக்கு போக விடாமல் நல்ல முறையில் படிக்க வைக்க வேண்டாமா? அவனை தொழில் பண்ண சொல்லி, விவசாயம் பண்ணச் சொல்லி உத்தியோகத்திற்குப் போக சொல்லி, வியாபாரம் பண்ணச் சொல்லி செய்தால் தான் நடக்கும். ' மகாத்மா காந்தி என்ன சொன்னார். இந்த ஏழை மக்களுடைய வாழ்க்கைத் தரத்தை உயர்த்த வேண்டுமென்று சொன்னார். இதற்கான் வழிகளைத் தானே நாங்கள் செய்கிறோம்."

இந்த கூற்றிலிருந்தே காமராஜரின் தூய எண்ணங்கள், செயல்பட்டுகள் நமக்கு எளிதில் விளங்குகிறது.

------------------------------
பால்: பொருட்பால்
அதிகாரம்: செங்கோன்மை (55)

குறள்:
வான்நோக்கி வாழும் உலகுஎல்லாம்; மன்னவன்
கோல்நோக்கி வாழும் குடி.

பொருள்:
உயிர்கள் எல்லாம் மழையை எதிர்பார்த்தே வாழும்; குடிமக்களோ ஆளுவோரின் நேர்மையான ஆட்சியை எதிபார்த்தே வாழ்வர்.
------------------------------

- By: டண்டணக்கா
[ இந்த "காமராஜ் - 101" பதிப்புகள் தொடரும் ]

நண்பர்களே ஒரு வேண்டுகோள், உங்களுக்கு பிடித்திருக்கும் பட்சத்தில், மறக்காமல் ஓட்டு போடவும், உங்களின் ஓட்டு இப்பதிப்பை மேலும் பல வாசகர்களுக்கு எடுத்து செல்ல உதவும்.

Courtesy/Credit:
All credit for the information *absolutely* goes to those authors listed in the resources. My part in this, is nothing more than gathering those information from different sources and presenting is better format. These sources were immensely helpful and made possible this blog series.

Comments:
காமராஜர் மீது நீங்கள் வைத்திருக்கும் அபிமானத்தை பாராட்டி விட்டேன் ஒரு குத்து.
 
வாங்க பாலசந்தர் கணேசன், குத்துக்கு ரொம்ப நன்றி.
 
நல்ல பணி.
தொடருங்கள்
 
Post a Comment



<< Home

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: ?????????.????-?? ????????????????, ????????????????

This page is powered by Blogger. Isn't yours?