Thursday, June 29, 2006

--------

காமராஜ் - 101 [ # 51 ]

மதிய உணவுத் திட்டத்திற்கு காமராஜரின் விளக்கம்:
மதிய உணவு அளிப்பதால், பள்ளிகளில் மாணவர்களின் வருகை அதிகரித்தது என்பதை உறுதி செய்தவுடன், ஏழை குழ்ந்தைகளுகள் கல்விக்கு அதுவே வழி செய்திடுமென்பதை காமராஜர் பின்வருமாறு கூறினார்.
" அத்தனைபேரும் படிக்கணும், வயிற்றிலே ஈரமில்லாதவன் எப்படி படிப்பான்? அவனுந்தானே நம் இந்தியாவிற்க்கு சொந்தக்காரன். ஏழைகக் குழ்ந்தைகளுக்குப் பள்ளிக்கூடத்திலேயே சோறு போட்டு படிக்க வைக்கணும். இதை தள்ளி போட முடியுமா என்ன? இது மிக முக்கியம் என்பதால் உடனடியாக தொடங்கி விடனும். பணத்திற்க்கு எங்கே போவது? இப்படிக் கேட்பீர்கள். வழி இருக்குது, தேவைப்பட்டால், பகல் உண்விற்கென்று தனியாக வரி போடத் தயங்க மாட்டேன். எப்படியும் எல்லா ஏழைகளும் ப்டிக்கனும். அவர்களுக்குந்தான் தேசம்"

முழுக்க முழுக்க தன்னார்வத் திட்டமாக துவக்கபட்ட மதிய உணவு திட்டத்தை, ஓராண்டு காலம் நடைமுறையில் சீர்தூக்கி பார்த்த பின்னர், 1957-ம் ஆண்டு நவம்பர் மாதம், தமிழக அரசின் நிதி உதவியுடன் செயல்படக்கூடிய, அதே சமயம் சமுதாய பங்கேற்புடன் கூடிய திட்டமாக் மாநிலத்தில உள்ள எல்லா பள்ளிகளிலும் நடைமுறைபடுத்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. தேவையான செலவினங்களில் 60% அரசும், 40% உள்ளூர் சமுதாயமும் என்ற அளவில் பங்கேற்பு இருந்திடும்.

இலவச மதிய உணவுக் குழுக்களுக்கு அனுமதி அளிப்பதற்க்கு எளிய நடைமுறைகள், அரசின் நிதியுதவி ஆகியவை உள்ளூர் மக்களின் மேற்பார்வையில் நடைமுறைபடுத்தபட்டதால், மிக விரைவாக எல்லாப் பள்ளிகளிலும் செயல்படுத்தக்கூடிய திட்டமாக இத்திட்டம் உருப்பெற்றது.

மதிய உணவு திட்டத்தின் மகத்தான வெற்றியை கீழ்கண்ட பட்டியல் தெளிவாக விளக்கும்:

( *** Please scroll down to see the tabular content... *** )



















Year

Total Schools

School offered Mid-day meal

Total students benefited
1957-5822,2208,2702.20 lakhs
1958-5923,44911,5527.00 lakhs
1959-6024,58023,1367.75 lakhs
1960-6125,14924,5868.86 lakhs
1961-6227,13526,40611.8 lakhs
1962-6328,00527,25611.65 lakhs



------------------------------
பால்: பொருட்பால்
அதிகாரம்: அமைச்சு (64)

குறள்:
தெரிதலும், தேர்ந்து செயலும், ஒருதலையாச்
சொல்லலும் வல்லது அமைச்சு.

பொருள்:
ஒரு செயலைப் பற்றிப் பலவையிலும் ஆராய்ந்து அறிதல், வாய்ப்பு வரும்போது ஆராய்தபடி செய்தல், நன்மை தருவனவற்றையே உறுதியாகச் சொல்லுதல் என்னும் இவற்றில் வல்லவரே அமைச்சர்.

------------------------------



- By: டண்டணக்கா
[ இந்த "காமராஜ் - 101" பதிப்புகள் தொடரும் ]

நண்பர்களே ஒரு வேண்டுகோள், உங்களுக்கு பிடித்திருக்கும் பட்சத்தில், மறக்காமல் ஓட்டு போடவும், உங்களின் ஓட்டு இப்பதிப்பை மேலும் பல வாசகர்களுக்கு எடுத்து செல்ல உதவும்.

Courtesy/Credit:
All credit for the information *absolutely* goes to those authors listed in the resources. My part in this, is nothing more than gathering those information from different sources and presenting is better format. These sources were immensely helpful and made possible this blog series.

Comments: Post a Comment



<< Home

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: ?????????.????-?? ????????????????, ????????????????

This page is powered by Blogger. Isn't yours?