Monday, June 26, 2006

--------

காமராஜ் - 101 [ # 48 ]

காமராஜ் ஆட்சியில் "தமிழ் நாடு பஞ்சாயத்து சட்டம்" 1958-ல் கொண்டு வரப்பட்டது. பஞ்சாயத்து ஆட்சி ஆரம்பமாகும் விழாவாக காந்தி ஜெயந்தி கொண்டாடப்பட்டது. 1960-ல் கொண்டாடபட்ட காந்தி ஜெயந்தியின் போது முதன் முதலாக 75 பஞ்சாயத்து யூனியன்கள் ஆரம்பமாயின. அதை அடுத்து தமிழ் புத்தாண்டு தினத்தில் 129 பஞ்சாயது யூனியன்கள் உருவாயின. 1961 காந்தி ஜெயந்தியன்று 169 பஞ்சாயத்து யூனியன்கள் உருவாக்கப்பட்டன. தமிழ் நாடு முழுவதும் காம்ராஜ் ஆட்சியில் 373 பஞ்சாயத்து யூனியன்களும், 12,000 பஞ்சாய்த்துகளும் செயல்பட ஆரம்பித்தன.
இவ்வாறு புதிய பஞ்சாயத்து முறை ஆட்சியை படிபடியாக மூன்று கட்டங்களாக, குறுகிய காலத்தி உருவாக்கி, அனைத்து அடிப்படை வசதிகளுடன் நிறைவேற்றிய சாதனை காமராஜ் ஆட்சியில்தான் நடந்தது.

புதிய பஞ்சாயத்து ஆட்சி, தமிழ் நாட்டில் ந்ன்கு வேரூன்றி செயல்பட்டது. கிராம நல வேளைகளை பஞ்சாயத்துகளே ஏற்று நடத்தும் சந்தர்பம் ஏற்பட்டது. விவசாயம், சாலை வசதி, கைத்தொழில், மாதர் நலம், சுகாதாரம், கால்நடை ம்ருத்துவ மனைகள் கட்டுவது, ஆரம்ப ப்ள்ளிகள் போன்ற பொறுப்புகளை பஞ்சாய்த்துகளும், பஞ்சாயத்து யூனியன்களுமே மேற்கொண்டு சிறபபாக செயல்பட்டன. உள்ளூர் தேவைகளுக்கு ஏற்ப திட்டங்கள் முடிவு செய்து செய்ல்படுத்திகொள்ள புதிய அதிகார பரவல் முறை 1958-ம் ஆண்டு ப்ஞ்சாயத்து சட்டம் மூலமாக நடைமுறைப் படுத்தபட்டது.

------------------------------
பால்: பொருட்பால்
அதிகாரம்: குடி செயல் வகை (103)


குறள்:
சூழாமல் தானே முடிவுஎய்தும், தன்குடியைத்
தாழாது உஞ்ற்று பவர்க்கு.

பொருள்:
தன் வீட்டிற்கும் நாட்டிற்கும் ஆகவேண்டிய செயலை விரைந்து செய்பவர்க்கு, அச்செயலைச் செய்து முடிக்கும் திறம் அவர் தானாகவே கிடைக்கும்.
------------------------------



- By: டண்டணக்கா
[ இந்த "காமராஜ் - 101" பதிப்புகள் தொடரும் ]

நண்பர்களே ஒரு வேண்டுகோள், உங்களுக்கு பிடித்திருக்கும் பட்சத்தில், மறக்காமல் ஓட்டு போடவும், உங்களின் ஓட்டு இப்பதிப்பை மேலும் பல வாசகர்களுக்கு எடுத்து செல்ல உதவும்.

Courtesy/Credit:
All credit for the information *absolutely* goes to those authors listed in the resources. My part in this, is nothing more than gathering those information from different sources and presenting is better format. These sources were immensely helpful and made possible this blog series.

Comments:
எழுதுங்க இன்னும் எழுதுங்க.நாங்க துணை நிற்போம்
 
வாங்க சிவஞானம்ஜி, துணை நிற்பதக்கு மிக்க நன்றி.
 
நல்லவைகளைச் செய்த நல்ல தலைவர்
 
Post a Comment



<< Home

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: ?????????.????-?? ????????????????, ????????????????

This page is powered by Blogger. Isn't yours?