Monday, March 20, 2006

--------

காமராஜ் - 101 [ # 25 ]

திருநெல்வேலி மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சி பிரமுகர் ஒருவர் திரைப் பட அரங்கம் ஒன்றை கட்டியிருந்தார். ஆனால் அதை திறப்பதற்க்கு மாவட்ட ஆட்சியரின் அனுமதி கிடைக்காமலேயே இருந்தது. அம்மாவட்டத்தில் காமராஜ் சுற்றுப்பயணம் போகிறார் என்பதை அறிந்து கொண்ட அந்த பிரமுகர், காமராஜரை அணுகி திரையரங்கை திறக்க ஒரு தேதி வாங்கி விட்டார். அதற்க்கு பயந்து கலெக்டர் அனுமதி தந்துவிடுவார் என்பது அவரின் எண்ணம்.

குறிப்பிட்ட நாள் வந்தது. காமராஜரும் அந்த திரையரங்கத்திற்க்கு வந்து சேர்ந்தார். அது வரையிலும் அனுமதி கிடைக்காததால் " எல்லா ஏற்பாடுகளும் ரெடி, ஆனா கலெக்டர் மட்டும் இன்னும் லைசென்சு கொடுக்கவில்லை" என்று காமராஜிடம் புகார் செய்தார்.

சுற்றுப்பயணத்தில் தன்னோடு இருந்த கலெக்டரிடம் விவரம் கேட்டார் காமராஜ். " இந்த திரையரங்கை கட்டியதி சில விதிமுறைகள் மீறப்பட்டிருக்கின்றன. அதனால்தான் அனுமதி கொடுக்கத் தாமதமாகிறது. இப்போது நீங்கள் விரும்பினால் உடனே அனுமதி கொடுத்து விடுகிறேன்." என்றார் கலெக்டர். உடனே காமராஜர் " அய்யய்யோ வேண்டாம் சட்டத்தை மீறி யார் நடந்தாலும் அது தப்புதான். உங்களுக்கு திருப்தி ஏற்பட்ட பிறகே அனுமதி கொடுங்கள்" என்று கலெக்டரிடம் சொல்லிவிட்டு திரையரங்கை திறக்காமலேயே சென்றுவிட்டார்.

பயிர்களை சுமந்து நிற்க்கும் போது நிலம் அழகு பெறுகிறது.
தாமரையை சுமந்து நிற்க்கும் போது குளம் அழகு பெறுகிறது.
நேர்மையை சுமந்து நிற்க்கும் போது தலைவன் அழகு பெறுகிறார்.

-------------------------------------------------------------------
பால்: அறத்துப்பால்
அதிகாரம்: அடக்கமுடைமை (13)

குறள்:
நிலையில் திரியாது அடங்கியான் தோற்றம்;
மலையினும் மாணப் பெரிது.

பொருள்:
தன் நேர்மையான வழியை விட்டு விலகாது அடக்கத்துடன் வாழ்பவனைப் பற்றிய பிறர் மனத் தோற்றம் மலையைக் காட்டிலும் மிக உயரமானது.
-------------------------------------------------------------------

- By: டண்டணக்கா
[ இந்த "காமராஜ் - 101" பதிப்புகள் தொடரும் ]

நண்பர்களே ஒரு வேண்டுகோள், உங்களுக்கு பிடித்திருக்கும் பட்சத்தில், மறக்காமல் ஓட்டு போடவும், உங்களின் ஓட்டு இப்பதிப்பை மேலும் பல வாசகர்களுக்கு எடுத்து செல்ல உதவும்.

Courtesy/Credit:
All credit for the information *absolutely* goes to those authors listed in the resources. My part in this, is nothing more than gathering those information from different sources and presenting is better format. These sources were immensely helpful and made possible this blog series.

Comments:
காமராஜர் படத்தில் பார்த்தேன்
 
ஒவ்வொரு நாளும் அழ வைக்கிறீர்கள்!!

'நாடு பார்த்ததுண்டா
இது போல ஒரு மனிதரை!'

கழகங்களைத் தோற்கடியுங்கள்!
காமராஜரின் ஆன்மாவை சிரிக்க வையுங்கள்!
 
நானும் பார்த்தேன்,

இது போன்ற மகத்தான தலைவனை கொண்ட கட்சியின் இன்றைய நிலையை நினைத்தால் வெட்க கேடாக இருக்கிறது.
 
//பயிர்களை சுமந்து நிற்க்கும் போது நிலம் அழகு பெறுகிறது.
தாமரையை சுமந்து நிற்க்கும் போது குளம் அழகு பெறுகிறது.
நேர்மையை சுமந்து நிற்க்கும் போது தலைவன் அழகு பெறுகிறார்.//

அருமையான ஒரு கவிதையோட முடிச்சி இருக்கிங்க.
 
இப்படியுமா,,?!
இனியும் வருமா???
நாம் தான் ; நல்ல தலைவர்கள் உருவாகுவதற்குத் தடையோ,,,,???
வெட்கமாக இருக்கிறது.
யோகன்
பாரிஸ்
 
'நிற்க்கும்' it is right. If i am not wrong it should be நிற்கும்.
 
அனானி, 'ற் பக்கதில் 'க்' வராது. சில நேரம் தவறுகள் நேர்ந்துவிடுகிறது. செம்மொழியை மேன்மை செய்வோம் சரியான பயன்பாட்டில்.
 
Post a Comment



<< Home

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: ?????????.????-?? ????????????????, ????????????????

This page is powered by Blogger. Isn't yours?