Thursday, January 05, 2006

--------

காமராஜ் - 101 [ # 17 ]

தொழில் துறைகளை வளர்பதைக் குறிக்கோளாகக் கொண்டு, பல்வேறு நடைமுறைகளை செயல்படுத்த தொடங்கியது காமராஜ் அரசு. காமராஜ் ஆட்சியின் இறுதியில் தமிழகம் தொழில் வளத்தில் வடநாட்டு மாநிலங்களை பின்னுக்குத் தள்ளி இரண்டாம் இடத்தை பிடித்துவிட்டது. அவரின் ஆட்சியில் தொழிதுறை வளர்ச்சியின் பகுதி...

பெரும் தொழில்கள்:
1. நெய்வேலி நிலக்கரித் திட்டம்
2. பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலை (I.C.F)
3. திருச்சி பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் (BHEL)
4. ஊட்டி கச்சா பிலிம் தொழிற்சாலை (HPL)
5. ஆவடி கனரக (டாங்க்) வாடன தொழிற்சாலை
6. கல்பாக்கம் அணுமின் நிலையம்
7. கிண்டி டெலிபிரிண்டர் தொழிற்சாலை
8. சங்ககிரி துர்கம் இந்தியா சிமெண்ட்ஸ்
9. மேட்டூர் காகிதத் தொழிற்சாலை
10. கிண்டி அறுவை சிகிச்சை கருவித் தொழிற்சாலை
11. துப்பாக்கி தொழிற்சாலை
12. நெய்வே நிலக்கரி சுரங்கம்
13. சேலம் இருப்பு உருக்காலை
14. பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலை
15. அரக்கோணம் இலகுரக ஸ்டீல்பிளாண்ட் தொழிற்சாலை

விவசாயம் சார்ந்த தொழில்கள்:
1. காமராஜ் பொருப்பேற்றபோது (1953) தமிழகத்தில் புகலூர், நெல்லிக்குப்பம், பாண்டியராஜபுரம் ஆகிய 3 சர்கரை ஆலைகள் இயங்கி வந்தது. 1963-ல் மொத்தம் 14 சர்கரை ஆலைகளாக உயர்ந்தது.
2. திருச்சியில் 20 லட்சம் சக்தி கொண்ட எரிசாராய உற்பத்தி தொழிற்சாலை துவக்கப்பட்டது.

பிற தொழில்கள்:
நூல் நூற்பு ஆலைகள் (159)
துணிநூற்பு பாவுகள் (Looms) (8000)
4 மிதிவண்டி தொழிற்சாலைகள்
6 உரத் தொழிற்சாலை
2 சோடா உற்பத்தி தொழிற்சாலை
21 தோல் பதனிடும் தொழிற்சாலை
ரப்பர் தொழிற்சாலை
காகித உற்பத்தி ஆலை
அலுமினிய உற்பத்தி ஆலை

தொழிற் பேட்டைகள்:
1. கிண்டி, விருதுநகர், அம்பத்தூர், ராணிப்பேட்டை, மதுரை, விருதுநகர், மார்த்தாண்டம், ஈரோடு, காட்பாடி, தஞ்சாவூர், திருச்சி உள்ளிட்ட 19 தொழிற்பேட்டைகள் உருவாக்கப்பட்டன.
2. இது தவிர திண்டுக்கல், புதுக்கோட்டை, காரைக்குடி, கோவில்பட்டி, கிருஷ்ணகிரி, அரக்கோணம், தேனி, நாகர் கோயில், கும்பகோணம் மற்றும் சிவகங்கை ஆகிய இடங்களில் புதிய தொழிற்பேட்டைகள் துவங்க காமராஜ் அரசு முயற்சி மேற்கொண்டது.
3. மேலும் சென்னை, நெய்வேலி, தூத்துக்குடி, சேலம், கோவை, பொள்ளாச்சி, திருச்சி ஆகிய இடங்களில் தொழிற் குழுமங்கள் அமைக்கப்பட்டன.

காமராஜ் ஆட்சிக் காலத்தில் தமிழகம் தொழில் வளர்ச்சியில் புலிப் பாய்ச்சல் கண்டது என்பதை இதிலிருந்தே நாம் அறியலாம்.

-------------------------------------------------------------------

பால்: பொருட்பால்

அதிகாரம்: குடி செயல் வகை (103)

குறள்:
சூழாமல் தானே முடிவுஎய்தும், தம்குடியைத்
தாழாது உஞற்று பவர்க்கு.

பொருள்:
தன் குடியையும், நாட்டையும் மேன்மை அடையச் செய்ய தேவையான் செயலை விரைந்து செய்பவர்க்கு, அச்செயலை செய்து முடிக்கும் திறம் அவர் நினைக்காமலே கிடைக்கும்.

-------------------------------------------------------------------


- By: டண்டணக்கா
[ இந்த "காமராஜ் - 101" பதிப்புகள் தொடரும் ]

நண்பர்களே ஒரு வேண்டுகோள், உங்களுக்கு பிடித்திருக்கும் பட்சத்தில், மறக்காமல் நட்சத்திரத்தில் ஓட்டு போடவும், உங்களின் ஓட்டு இப்பதிப்பை மேலும் பல வாசகர்களுக்கு எடுத்து செல்ல உதவும்.

Courtesy/Credit:
All credit for the information *absolutely* goes to those authors listed in the resources. My part in this, is nothing more than gathering those information from different sources and presenting is better format. These sources were immensely helpful and made possible this blog series.

Comments:
தனக்கு முதல்மந்திரி; தன்மகனுக்கு மேயர் ,
மருமகனுக்கு மத்தியில் மந்திரி, மனைவிக்கு மருமகளுக்கு பேரன் இவர்களுக்கொன்று என தனி தனி என கொள்ளைக்கூட்டம் தான். நான் கருணாநிதியை மட்டும் சொல்லவில்லை இன்றைய அரசியல்வாதிகளைத்தான்
 
வாங்க என்னார், கமெண்டெல்லாம் பயங்கர காரமா இருக்கே :)
 
the most unfortunate person in the world is kamaraj.tamilians,congress men and smt.indira nobody thanked him for the benefits they have got because of him.vijayan.
 
Post a Comment



<< Home

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: ?????????.????-?? ????????????????, ????????????????

This page is powered by Blogger. Isn't yours?