Sunday, June 25, 2006

--------

காமராஜ் - 101 [ # 47 ]

இந்தியாவிலேயே தமிழகத்தை தொழில் வளர்ச்சியில் முதன்மை மாநிலமாக்க வேண்டுமென்ற எண்ணம் கொண்டிருந்த காமராஜ் தொழில் வளர்ச்சி விரைந்து நாடைபெற எளிய தெளிவான நடைமுறைகளை மேற்கொண்டதற்க்கு "மணலி சுத்திகரிப்பு" ஆலையே ஒரு நல்ல எடுத்துக்காட்டு.
தென்கிழக்கு ஆசியாவிலேயே மிகப் பெரிய திட்டமாக மணலி சுத்திகரிப்பு ஆலை திட்டமிடப்பட்டிருந்தது. ஆலைக்கென் மிகப்பெரிய நிலம் கையப்படுத்துதல் மேற்கொள்ள வேண்டிய நிலை இருந்தது. என்வே நிலம் கையகபடுத்துவதில் ஏற்படும் பொதுவான கால விரயத்தை தவிர்த்திட காமராஜ் விரும்பினார். ஆலைக்கு கையப்படுத்த இருந்த நிலப்பரப்பில் 600 ஏக்கர் நிலம் மணலி ராமகிருஷ்ண முதலியாருக்கு உரிமையாக் இருந்ததது. எனவே ராமகிருஷ்ண முதலியாரை நேரடியாக வரவழைத்து திட்டத்தினுடைய நன்மையை பற்றியும் அவர்கள் அளிக்க கூடிய நிலப்பகுதியினுடைய தேவை பற்றியும் முதல்வர் காமராஜ் எடுத்துரைத்தார். ராமகிருஷ்ண முதலியாருடைய குடும்பத்தோடு இணைந்துவிட்ட மணலி ஊரில் இருக்ககூடிய நிலங்களையும், சொத்துக்களையும் இழப்பதில் தங்களுக்கு இருக்ககூடிய மனச்ச்ங்கடங்களையெல்லாம் முதல்வர் காமராஜிடம் ராமகிருஷ்ண முதலியார் எடுத்துரைத்தார். மணலி நிலத்தை தவிர வேறு எந்த நிலத்தை தருவதற்க்கும் தாங்கள் தயாராக இருப்பதாகவும் தங்களுடைய மனதோடு ஒன்றிவிட்ட மணலி நிலத்தை மட்டும் தருவதற்க்கு தங்களுக்கு இருக்கும் தயக்கத்தை தயங்கி, தயங்கி காமராஜிடம் எடுத்துரைத்தார் ராமகிருஷ்ண முதலியார். ஆனால் காமராஜரோ, இந்த இடம்தான் சரியானா இடம், இந்த இடம் இல்லையென்றால் சுத்திகரிப்பு ஆலை தமிழ்நாட்டுக்கு வராது, வேறு மாநிலத்திற்க்கு சென்றுவிடும். இத்தகைய நிலையில் செண்டிமென்ட் ஆக பார்பது சரியாக வராது. தமிழ்நாட்டிற்கு பெரிய ஆலை வரும் என்பது மட்டு மனதில் தெளிவாக வையுங்கள் என்று தெளிவாக கூறினாலும் அவருக்கே உரிய பாணியில் பரவாயில்லை பார்க்கலாம் என்று கூறினார். உடனே சுத்திகரிப்பு ஆலை அமைப்பதற்கான் தன்னுடைய நிலங்களை தருவதற்க்கு ராமகிருஷ்ண முதலியார் தன்னுடைய சம்மதத்தை முதலமைச்சர் காமராஜிடம் தெரிவித்தார்.

------------------------------

பால்: பொருட்பால்
அதிகாரம்: அறிவுடைமை (43)

அறிவுடையார் ஆவது அறிவார்; அறிவுஇலார்
அஃதுஅறி கல்லா தவர்.

அறிவுடையார் நாளை வர இருப்பதை முன் அறிய வல்லவர்; அறிவு இல்லாதவரோ அதனை அறிய இயலாதவர்.
------------------------------

- By: டண்டணக்கா
[ இந்த "காமராஜ் - 101" பதிப்புகள் தொடரும் ]

நண்பர்களே ஒரு வேண்டுகோள், உங்களுக்கு பிடித்திருக்கும் பட்சத்தில், மறக்காமல் ஓட்டு போடவும், உங்களின் ஓட்டு இப்பதிப்பை மேலும் பல வாசகர்களுக்கு எடுத்து செல்ல உதவும்.

Courtesy/Credit:
All credit for the information *absolutely* goes to those authors listed in the resources. My part in this, is nothing more than gathering those information from different sources and presenting is better format. These sources were immensely helpful and made possible this blog series.

Comments:
பெருந்தலைவரின் அனுகுமுறையெ
தனிதான்
 
வாங்க சிவஞானம்ஜி, வருகைக்கு நன்றி.
 
இன்றைய அரசியல் வாதிகள்,' இந்த இடம் 50 ஆயிரம் தான் பொரும் நான் 1 லட்சம் வாங்கித் தருகிறறேன் எனக்கு 25 ஆயிரம் கொடு இல்லாவிட்டால்'...
என மிரட்டுவார்கள்
 
Good job!!!!!!!!!!!!!!!!!!!!!
 
Post a Comment



<< Home

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: ?????????.????-?? ????????????????, ????????????????

This page is powered by Blogger. Isn't yours?