Wednesday, June 21, 2006

--------

காமராஜ் - 101 [ # 45 ]

முன்னால் முதல்வர் குமாரசாமிராசாவின் திருவுருவப்படத்தை திறப்பதற்காக பாரத பிரதமர் நேரு ராஜபாளைய்த்திற்கு வந்திறுந்தார். முதவர் காமராஜரும் உடன் வந்திருந்தார். நேருவுக்கு மிகப்பெரிய அளவில் வரவேற்ப்பு தரபட்டது. யார் யார் நேருவுக்கு மாலை அணிவிப்பது என பட்டியளிட்டு மாவாட்ட ஆட்சித்தலைவரால் அதற்கான அனுமதியும் வழங்கப்பட்டிருந்தது.
விடுதலை போராட்ட வீரர் ஏ.கே.பெருமாள்ராஜா என்ற பேச்சி ராஜா அவர்கள் வழியாகவும் பிரதமர் நேரு போவதாக பயணத்தில் இருந்தது. எனவே, தன் தெருவிற்க்கு வருகின்ற நேருவுக்கு மாலை அணிவித்து வரவேற்பு கொடுக்க தியாகி ஏ.கே.பெருமாள் ராஜா விரும்பினார். ஆனால் அதற்கான முன் அனுமதியை அவர் பெற்றிருக்கவில்லை. எனவே, தியாகியாக இருந்தாலும் , பிரதம்ர் நேருவுக்கு மாலை அணிவிக்க முடியுமா? என்ற சந்தேகம் இருந்து கொண்டிருந்தது.
அவருடன் இருந்தவர்களும், "அனுமதி இல்லை, எனவே மாலை அணிவித்து மாட்டிக்கொள்ள வேண்டாம்" என அவரை எச்சரிக்கை செய்து கொண்டிருந்தனர். விடுதலைக்காக பாடுபட்ட அந்த தியாகி கட்டாயம் மாலை அணிவித்தே ஆகவேண்டுமென உறுதி கொண்டிருந்தார். அதற்க்கான் எச்சரிக்கைகளையும் அவர் பொருட்படுத்தவில்லை.
பாரத பிரதமர் நேரு, முதல்வர் காமராசர் இருவரும் ஊர்வலமாக் வந்து கொண்டிருந்தனர். தொலைவிலிருந்தே தியாகி பெருமாள்ராஜா தனது வீட்டில் மாலையுடன் காத்திருப்பதை காமராஜ் பார்த்துவிட்டார். உடனடியாக தாங்கள் வந்த வாகனத்தை தியாகி பெருமாள் ராஜா வீட்டருகே கொண்டு செல்ல கட்டளையிட்டார். பெருமாள்ராஜாவை கூப்பிட்டு பிரதமர் நேருவுக்கு அறிமுகம் செய்துவைத்தார். பெருமாள் ராஜாவும் மிகுந்த மகிழ்ச்சியோடு நேருவிற்க்கு மாலை அணிவித்தார். இதன் வழியாக நாட்டிற்க்கு பாடுபட்ட ஒரு தியாகிக்கு நேர்ந்திருக்க கூடிய கசப்பான உணர்வுகளை தவிர்து விட்டார்.
இதற்க்கு அடிப்படை காரணம், மாட மாளிகையில் இருந்து ஆட்சி செய்யாமல் மக்களோடு மக்களாக இருந்த காரணத்தால் அவர்களுடைய உண்ர்வுகளை புரிந்துகொண்டு செயல்படக்கூடிய தன்மையை காமராஜ் பெற்றிருந்தார்.

------------------------------

பால்: பொருட்பால்
அதிகாரம்: குறிப்பறிதல் (71)

குறள்:
கூறாமை நோக்கிக் குறிப்புஅறிவான், எஞ்ஞான்றும்
மாறாநீர் வையக்கு அணி.

பொருள்:
ஒருவன் வாயால் சொல்லாமல் இருக்க, அவனுடைய முகத்தையும் கண்ணையும் பார்த்தே அவன் மனக்கருத்தை அறிந்துகொள்பவன், எப்போதும் வற்றாத கடலால் வளைக்கப்பட்ட இவ்வுலகத்தவர்க்கு ஆபரணம் போன்றவன்.
------------------------------

- By: டண்டணக்கா
[ இந்த "காமராஜ் - 101" பதிப்புகள் தொடரும் ]

நண்பர்களே ஒரு வேண்டுகோள், உங்களுக்கு பிடித்திருக்கும் பட்சத்தில், மறக்காமல் ஓட்டு போடவும், உங்களின் ஓட்டு இப்பதிப்பை மேலும் பல வாசகர்களுக்கு எடுத்து செல்ல உதவும்.

Courtesy/Credit:
All credit for the information *absolutely* goes to those authors listed in the resources. My part in this, is nothing more than gathering those information from different sources and presenting is better format. These sources were immensely helpful and made possible this blog series.

Comments:
Dandanaka....

Ummathu sevvayey innavendru solli pugazzvathu.... Ungallaku naan migavum kadan pattu irrkiren...

Vaazgha Kamarajar Pughaz!

Anbudan,
Natarajan
 
திரும்பத் திரும்பச் சொன்னாலும்...

உண்மையென்பதால் வெட்கமின்றிச் சொல்கின்றேன்!

ஒவ்வொரு முறையும் உங்கள் பதிவைப் படித்ததும்,

அழுகின்றேன்.

மாமனிதரைப் பற்றி நினைந்து, நினைந்து உருகுகின்றேன்.

மிக்க நன்றி!
 
"ம்" இவற்றை வாசித்தாவது மகிழ்வோம்!
எழுதுங்கள்!
யோகன் பாரிஸ்
 
வாங்க நடராஜன், அப்பப்ப தலைய காட்றீங்க, சந்தோசம்.

வாங்க எஸ்.கே, தொடர்ந்து வர்ரது ரொம்ப சந்தோசம்.

வாங்க யோகன், வருகைக்கு நன்றி.
 
டண்டனக்கா,
பெருந்தலைவரைப் பற்றிய பதிவுகளை ஒரு PDF file ஆகப் போட்டு லிங் கொடுங்களேன்
 
Post a Comment



<< Home

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: ?????????.????-?? ????????????????, ????????????????

This page is powered by Blogger. Isn't yours?