Thursday, June 08, 2006

--------

காமராஜ் - 101 [ # 40 ]

காமரஜின் ஒரு மேடைப் பேச்சு - நவசக்தி 13.7.68

" ஏழைகள் மானம் மரியாதையுடன் வாழ்வதைப் பணத் திமிங்கலங்கள் விரும்பவில்லை. எழைகள் என்றும் அடிமைகளாகவேதான் இருக்க வேண்டும் என்று அவர்கள் விரும்புக்றவர்கள். ஏழை மக்கள் இந்தப் பணக்காரர்களை பற்றிக் கவலைப் படக்கூடாது.

நம்மைச் சாதிட்ச் சண்டையில் திருப்பி விடுகிறார்கள். என் ஜாதிக் காரர்களுக்கு மந்திரி பதவி வேண்டும் என்க்றார்கள். யார் மந்திரியாக இருப்பது பிரச்சனையல்ல. மக்களுக்கு யார் நன்மைகள் செய்கிறார்கள் என்பதுதான் பிரச்சனை.

நான் கூடப் பது ஆண்டுகளாகப் பெரிய மந்திரியாக இருந்தேன். நான் மந்திரியாக இருந்தேன் என்பதற்காக நாடார்களெல்லாம் "நாடார் மந்திரியாக இருக்கிறார்; நாங்கள் எல்லாம் உழைக்க மாட்டோம், உட்கார்ந்து கொண்டே சாப்பிடுவோம்' என்று சொன்னால் முடியுமா என்ன?

நான் மந்திரியாக் இருந்தேன், எனக்கு அரசாங்கத்தில் வீடும் காரும் கொடுத்தார்கள். இதனால் மற்ற நாடார்களுக்கு என்ன லாபம்? ஆகையால் ஜாதியை சொல்லி ஏமாற்றுகிறவர்களிடம் நீங்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும், பலியாகி விடக் கூடாது.

நான் தேர்தலில் தோல்வி அடைந்தவன், ஏன் மீண்டும் மக்களை சந்திக்கிறேன்? யார் தயவும் எனக்குத் தேவையில்லை. நான் மக்கள் வாழ வேண்டும் என்று விரும்புகிறேன். இதனால்தான் பணக்காரர்கள் என்னைத் தோற்கடித்தார்கள்.

நான் இனித் தூங்கப் போவதில்லை. மக்கள் இப்போது விழித்துக் கொண்டார்கள். நான் எத்தனை தடவை தேர்தலில் தோல்வி அடைந்தாலும் மக்களை சந்திக்க தவற மாட்டேன். வெற்றி, தோல்வியைக் கண்டு கவலைப்படாதவன்."

- நவசக்தி 13.7.68

------------------------------
பால்: அறத்துப்பால்
அதிகாரம்: வாய்மை (30)

குறள்:
மனத்தொடு வாய்மை மொழியின், தவத்தொடு
தானம்செய் வாரின் தலை.

பொருள்:
உள்ளம் அறிய உண்மை பேசுவபன், தவமும் தானமும் செய்பவரைக் காட்டிலும் உயர்ந்தவன் ஆவான்.
------------------------------

- By: டண்டணக்கா
[ இந்த "காமராஜ் - 101" பதிப்புகள் தொடரும் ]

நண்பர்களே ஒரு வேண்டுகோள், உங்களுக்கு பிடித்திருக்கும் பட்சத்தில், மறக்காமல் ஓட்டு போடவும், உங்களின் ஓட்டு இப்பதிப்பை மேலும் பல வாசகர்களுக்கு எடுத்து செல்ல உதவும்.

Courtesy/Credit:
All credit for the information *absolutely* goes to those authors listed in the resources. My part in this, is nothing more than gathering those information from different sources and presenting is better format. These sources were immensely helpful and made possible this blog series.

Comments:
சத்தியமான பேச்சு!

அந்தப் பணக்காரர்கள்தான் இன்னமும் கோலோச்சுகிறார்கள்!!
 
வாங்க SK, வருகைக்கு நன்றி.
 
Post a Comment



<< Home

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: ?????????.????-?? ????????????????, ????????????????

This page is powered by Blogger. Isn't yours?