Thursday, March 23, 2006

--------

காமராஜ் - 101 [ # 29 ]

அரசின் மொத்த வருவாய் குறைவாக இருந்தாலும், நாட்டின் நல்ல, பரந்த உள்ளம் படைத்த செல்வந்தர்களையும் கல்விப் பெருக்கத்திற்க்கு அழைத்துவர திட்டமிட்டு மாநிலம் முழுவதும் பள்ளி சீரமைப்பு மாநாடு நடந்த நேரமது.

அப்படி நடந்த பரமக்குடி கல்வி மாநாட்டில், கல்வியின் பெருமையையும், நாட்டோர் அதை பெருக்குவதில் ஆர்வங்கொள்ள வேண்டிய அவசியத்தையும் அழகுத் தமிழில் எழுதி, அச்சடித்து விநியோகம் செய்திருந்தார் துணை ஆய்வாளர் திரு. கந்தசாமி அவர்கள். மாநாட்டின் போது தன்னிடம் தந்த ஒரு அச்சுப் பிரதியை படித்த காமராஜ், சட்டமன்ற உறுப்பினரைக் கூப்பிட்டு அதைப் பத்தாயிரம் படிவங்களெடுத்து தொகுதி பூராவும் விநியோகிக்கும்படி கூறினார்.

மாநாடு முடித்து புறப்படும் போது, " எங்கே அந்த கல்வி அதிகாரித் தம்பி, அவரை கூப்பிடுங்க" என்றார். விரைந்து ஜீப் அருகே வந்த கந்தசாமியை " வாங்க தம்பி, காருலே ஏறுங்க... உங்ககிட்ட சில விவரங்கள் கேட்கணும்" என்றார்.

ஏற்கனவே முதல்வரின் பாதுகாப்பு அதிகாரி வண்டியின் முன்னிருக்கையில் அமர்ந்துவிட, இவர் சற்றே யோசித்தார்.

" இங்கே ...என் பக்கத்தில் உட்காருங்க" என்றழைக்க, இவர் ஒரு கணம் மலைத்துவிட்டார். நாட்டின் முதல்வருடன் அமர ஜீப் வண்டி புறப்பட்டது. போகும் போதே அவ்வட்டாரத்தில் இவரது சரகத்தில் உள்ள் பள்ளிகளைப் பற்றியும் கிராமங்கள் காட்டும் ஆர்வத்தையும் பற்றி விசாரித்துக் கொண்டே வந்தார். அப்பொது காட்டாற்றின் தரைப் பாலத்தை வண்டி தாண்டிக் கொண்டிருந்தது.

உடனே காமராஜ் வண்டியை நிறுத்த சொல்லி " ஆமா... இந்தக் காட்டாற்றில் தண்ணி போகும் போது இந்தப் பக்கத்து மாணவர்கள் எப்படிப் பள்ளிக் கூடத்துக்கு வருவாங்க?" என்று கேட்க.

" மழைக் காலத்தைல் வெள்ளம் போகும் போது மாணவர்களால் வர முடியாதையா" என்றார். அப்போது காமராஜ் "கல்வித்துறை உத்தரவுப்படி 3 மைலுக்குள்ள் பள்ளிக்கூடம் இருந்தா, பக்கத்தில் வேற பள்ளிக் கூடத்துக்கு அனுமதி கிடையாது. அப்படித்தானே. அப்போ நீங்க ஒன்னு செய்யுங்க. இந்த காட்டாற்றைக் காரணமாகக் காட்டி இந்தப் பக்கத்தில் ஒரு பள்ளிக் கூடத்துக்கு அனுமதி கேளுங்க... நானும் சொல்லி அதற்கு ஒப்புதல் தரச்சொல்லிடறேன்" என்றார்.

கல்வி அதிகாரி திரு. கந்தசாமி ஆச்சர்யத்தால் உறைந்து போனார்.

-------------------------------------------------------------------

பால்: பொருட்பால்

அதிகாரம்: குடி செயல் வகை (103)

குறள்:
சூழாமல் தானே முடிவுஎய்தும், தம்குடியைத்
தாழாது உஞற்று பவர்க்கு.

பொருள்:
தன் குடியையும், நாட்டையும் மேன்மை அடையச் செய்ய தேவையான செயலை விரைந்து செய்பவர்க்கு, அச்செயலை செய்து முடிக்கும் திறம் அவர் நினைக்காமலே கிடைக்கும்.
-------------------------------------------------------------------

- By: டண்டணக்கா
[ இந்த "காமராஜ் - 101" பதிப்புகள் தொடரும் ]

நண்பர்களே ஒரு வேண்டுகோள், உங்களுக்கு பிடித்திருக்கும் பட்சத்தில், மறக்காமல் ஓட்டு போடவும், உங்களின் ஓட்டு இப்பதிப்பை மேலும் பல வாசகர்களுக்கு எடுத்து செல்ல உதவும்.

Courtesy/Credit:
All credit for the information *absolutely* goes to those authors listed in the resources. My part in this, is nothing more than gathering those information from different sources and presenting is better format. These sources were immensely helpful and made possible this blog series.

Comments:
good one.

I really wish we have a leader like him now
 
miga nanraga irukkinradhu....
niruthi vidatheergal
thamishmanam star mark eppadi seyvadhu?
 
Post a Comment



<< Home

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: ?????????.????-?? ????????????????, ????????????????

This page is powered by Blogger. Isn't yours?