Thursday, March 16, 2006

--------

காமராஜ் - 101 [ # 22 ]

1969-ம் ஆண்டு ஜனவரி 8-ம் தேதி நாகர்கோவில் இடைத்தேர்தல் நடந்தது. அப்பச்சி அப்பச்சி என குமரி மக்கள் காமரஜரை அன்போடு அழைத்தனர். ஒரு லட்சத்து 28 ஆயிரத்து 201 ஓட்டுகள் வித்யாசத்தில் காமராஜரை வெற்றி பெற வைத்தனர். நாகர்கோவிலின் நாயகனாகி, குமரி மக்களின் அப்பச்சி ஆனார் காமராஜர்.

தாயார் சிவகாமி அம்மையார் சுகவீனமாய் இருப்பதாக தகவல் வந்தது. விருதுநகர் வீட்டுக்கு சென்ற காமராஜ் மயங்கிய நிலையில் இருந்த அன்னையின் அருகில் அமர்ந்தார். அன்னையாரின் முகத்தில் எவ்வித பதட்டமோ, பரபரப்போ காணப்படவில்லை. கண் விழித்துப் பார்த்த அன்னையில் விழிகளில் நீர் வழிந்தது. எவ்வித சலனமுமின்றி தாயின் உணவு மற்றும் மருந்து பற்றி காமராஜ் விசாரித்தார்.

" ஒரு வாய் சாப்பிட்ட்டு விட்டுப் போ" என்று அன்னை சிவகாமி கூறினார். காமராஜரும் அவசர அவசரமாக சாப்பிட்டுவிட்டு "அப்போ நான் வரட்டுமா என கை கூப்பினார்". " மகராசனாய் போய்ட்டு வா" என்று தாய் விடை கொடுத்தார். வீட்டில் சாப்பிட்டு எவ்வளவு நாளானது? என்று உடன் இருந்தவர்கள் கேட்டார்கள். " ஒரு 25 அல்லது 30 வருடம் இருக்கும்" என்றார் காமராஜ். அனைவரும் திகைத்தனர். மரண படுக்கையில் இருந்த தாயின் கடைசி ஆசையை நிறைவேற்றிய காமராஜ் உடனே நாட்டைப் பற்றி பேச ஆரம்பித்தார்.

-----------------------------------------
பால்: அறத்துப்பால்

அதிகாரம்: நீத்தார் பெருமை (5)

குறள்:
ஒழுக்கத்து நீத்தார் பெருமை, விழுப்பத்து
வேண்டும் பனுவல் துணிவு.

பொருள்:
தமக்குரிய ஒழுக்கத்தில் வாழ்ந்து, ஆசைகளை அறுத்து, உயர்ந்த மேன்மக்களின் பெருமையே சிறந்தனவற்றுள் சிறந்தது என்று நூல்கள் சொல்கின்றன.
-----------------------------------------

- By: டண்டணக்கா
[ இந்த "காமராஜ் - 101" பதிப்புகள் தொடரும் ]

நண்பர்களே ஒரு வேண்டுகோள், உங்களுக்கு பிடித்திருக்கும் பட்சத்தில், மறக்காமல் ஓட்டு போடவும், உங்களின் ஓட்டு இப்பதிப்பை மேலும் பல வாசகர்களுக்கு எடுத்து செல்ல உதவும்.

Courtesy/Credit:
All credit for the information *absolutely* goes to those authors listed in the resources. My part in this, is nothing more than gathering those information from different sources and presenting is better format. These sources were immensely helpful and made possible this blog series.

Comments:
மனதை நெகிழ வைக்கும் சம்பவம்.
 
வாங்க பரஞ்சோதி , வருகைக்கு நன்றி.
 
நினைத்தே பார்க்க முடியாத அளவு ரொம்ப நல்லவரா இருந்து இருக்கிறாரே.
 
Post a Comment



<< Home

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: ?????????.????-?? ????????????????, ????????????????

This page is powered by Blogger. Isn't yours?