Wednesday, January 04, 2006

--------

காமராஜ் - 101 [ # 16 ]

தொண்டர்கள் யாராவது கதர் துண்டுகள், சால்வைகள் அணிவித்தால் தலை தாழ்த்தி ஏற்றுக் கொள்வார். ஆனால் பூமாலைகளை கோண்டுவந்தால் கையிலேயே வாங்கிக் கோள்வார். இது தொண்டர்களின் நெஞ்சில் ஆதங்கத்தை ஏற்படுத்தியது உண்டு.
தொண்டர்களின் அன்பு வெளிப்பாட்டை ஏற்பதில் ஏன் இந்த பாகுபாடு? இதற்கான விடையை ஒரு முறை திரு.வைரவன் விளக்கினார்.

காமராஜ் தனக்கு அணிவிக்கபடும் துண்டுகளனைத்தையும் பால மந்திர் எனும் அனாதைச் சிறுவர் பள்ளிக்கு அனுப்பி விடுவார். அவை அக்குழந்தைகளுக்கு உடனடியாக பயன்படும். விலை உயர்ந்த சால்வைகள் விற்பனைக்கு பிறகே குழந்தைகளுக்கு சென்று சேரும் என்பதால் அவைகளை அதிகம் விரும்பமாட்டார்.

பூ மாலைகளை முதலில் வாங்கிக்கொண்டுதானிருந்தார். ஆனால் அவையனைத்தும் பயன்படாமல் தோட்டத்து எருக்குழிக்கே சென்று விடுவதால் மிகுந்த கவலையடைவார். மேலும் மலர்மாலைகளில் பூக்களினிடையே வாழும் புழுக்களின் கடிகளால் பலமுறை கழுத்து புண்ணாகிப் போயிருக்கிறார். ஜரிகை நூல் சுற்றிய மாலைகளால் பலமுறை அறுத்துக் கழுத்தில் கீறலகள் கண்டிருக்கிறார். நீரிழிவு நோய் தாக்கிய உடலாகையால், அப்புண்டளால் துன்பற்றிருக்கிறார். எனவே மலர் மாலைகளை விரும்ப மாட்டார்.

மேலும் தொண்டர்கள் அவர் காலில் விழுவதை விருப்பவே மாட்டார்.

" அதென்ன... மனுசனுக்கு மனுசன் காலி விழுந்து குப்பிடறது" என்று கூறுவார். சில வேளைகளில் காலில் விழுபவர்களை செல்லமாக அடித்தும் விடுவார்.

-------------------------------------------------------------------
பால்: பொருட்பால்

அதிகாரம்: சான்றாண்மை (99)

குறள்:
குணநலம் சான்றோர் நலனே; பிறநலம்
எந்நலத்து உள்ள்தூஉம் அன்று

பொருள்:
சான்றோர் என்பவர்க்கு அழகு, குணங்களால் ஆகிய அழகே. பிற புற அழகெல்லாம் எந்த அழகிலும் சேரா.

-------------------------------------------------------------------

- By: டண்டணக்கா
[ இந்த "காமராஜ் - 101" பதிப்புகள் தொடரும் ]

நண்பர்களே ஒரு வேண்டுகோள், உங்களுக்கு பிடித்திருக்கும் பட்சத்தில், மறக்காமல் நட்சத்திரத்தில் ஓட்டு போடவும், உங்களின் ஓட்டு இப்பதிப்பை மேலும் பல வாசகர்களுக்கு எடுத்து செல்ல உதவும்.

Courtesy/Credit:
All credit for the information *absolutely* goes to those authors listed in the resources. My part in this, is nothing more than gathering those information from different sources and presenting is better format. These sources were immensely helpful and made possible this blog series.

Comments:
ஆமாம் உண்மைதான் சிலர் மாலை அணிவித்தால் அதில் உள்ள தலை இலைகள் தலைவர் உடலை அரிக்க வைத்திருக்கிறது.
 
மாபெரும் தலைவரின் வரலாற்றை விரும்பி படிக்கிறேன், தொடருங்கள்.
 
வாங்க என்னார்:)
வாங்க பரஞ்சோதி, தொடர்ந்து வாருங்கள்.
 
அன்பர் டண்டணக்கா

இப்பதிவை என்னுடைய சிறுவர் பூங்காவில் சுட்டி காட்ட விரும்புகிறேன்.

குழந்தைகள் காமராஜரின் நற்பண்புகளையும், எளிமையான வாழ்க்கையையும் தெரிந்துக் கொள்ள வேண்டும்.

உங்க மொத்த பதிவையும் நேற்று தான் படித்தேன், என் வட இந்திய நண்பர்களுக்கு சொல்ல சொல்ல ஆச்சரியப்பட்டார்கள், இத்தலைவன் போல் வேறு ஒரு தலைவன் வரவில்லையே என்றும், இந்தியாவின் பிரதமர் பதவியை ஏன் ஏற்க்கவில்லை என்றும் வருத்தப்பட்டார்கள். அவர் ஏற்றிருந்தால் இன்று கலாம் காணும் கனவு எப்போவே நனவாகி இருக்கும் என்று சொன்னார்கள்.
 
வாங்க பரஞ்சோதி ,
உங்க சிறுவர் பூங்காவி சுட்டி குடுப்பதற்க்கு மிக்க நன்றி.
உங்கள் நண்பர்களின் ஆதங்கம் நியாயமானதுதான். காமராஜ் பதவி விலகிய போது, பெரியாரின் ஆதங்கம் அதிகமாக இருந்ததை நினைவு கூர்கிறது.
ஒரு நாலு மாசத்துக்கு முன்ன, உங்கக் பதிவ எங்க அக்கா பையனுக்கு கத சொல்ல அக்காங்ககிட்ட குடுத்தேன். அப்புறம் பையன் அவனா லேப் டாப்ப ஆன் பண்ணி, உங்க பதிவுக்கு போக சொல்லி புது கத வந்திருக்கானு அக்காவ டெய்லி செக் பண்ண் சொல்லி உயிர் எடுத்தான்னு சொன்னாங்க. உங்க பதிவ பார்த்த உடனே நான் நோட் பண்ணி வச்சுட்டேன், ரொம்ப நல்லா இருக்கு. தொடர்ந்து ஊக்கத்தோட எழுதுங்க, நெறையா பேருக்கு பயன்படும்.
 
Post a Comment



<< Home

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: ?????????.????-?? ????????????????, ????????????????

This page is powered by Blogger. Isn't yours?