Thursday, December 29, 2005

--------

காமராஜ் - 101 [ # 13 ]

தாம்பரத்தில் ஒரு பள்ளித்திறப்பு விழாவுக்குச் சென்ற காமராஜ் அப்போது அங்கு வசித்த ஜீவாவையும் அழைத்துச் செல்லலாம் என நினைத்து அவரில்லம் சென்றபோது, ஜீவா வாழ்ந்த நிலை கண்டு அதிர்ந்து போனார். உடுத்த மாற்றுடை கூட இல்லாத நிலையில் துவைத்த ஆடையை உலர்த்திக் கொண்டிருந்தார் ஜீவா.

சொல்வேறு, செயல்வேறாக வாழும் தலைவர்களிடையில், ஜீவா தன் கொள்கையை உபதேசித்தபடியே வாழ்ந்த வைரக்கல்.

அவரது இல்லற ஓடத்தை ஓரளவேனும் இன்பம் ஏந்தி செல்லும் வகையில் ஜீவாவின் துணைவியார் திரு. பத்மாவதி அம்மையாருக்கு ஒரு அரசு பணி தந்து ஆதரித்தார்.

பொதுவுடமை நாடானா ரஷ்யா சென்று திருப்பிய சில நாட்களில் ஜீவா திடீரென சுகவீனமுற்றார்.

1963 ஆம் ஆண்டு ஜனவரி 17 ஆம் நாள் அவரை மருத்துவமனையில் சேர்ப்பதற்க்கு முன் சிம்மெனத் தமிழகம் முழுவதும் கர்ஜணை செய்த ஜீவா கடைசியாக பேசிய சொற்கள்

"பத்மாவதிக்கு தந்தி கொடு... காமராஜருக்கு டெலிபோனில் செய்தி சொல்" இவைமட்டுமே. மறுநாள் காலை 7:30 மணிக்கு அவர் உயிர் மூச்சு அடங்கியது.

-------------------------------------------------------------------

பால்: பொருட்பால்

அதிகாரம்: நட்பு (79)

குறள்:
புணர்ச்சி பழகுதல் வேண்டா; உணர்ச்சிதான்
நட்பாம் கிழமை தரும்

பொருள்:
நட்பு கொள்வதற்கு நெருங்கிப் பழக வேண்டும் என்பதில்லை. இருவருக்கும் ஒத்த உள்ளத்து உணர்ச்சியே நட்பு செய்வதற்க்குரிய தோழமையைக் கொடுக்கும்.
-------------------------------------------------------------------

- By: டண்டணக்கா
[ இந்த "காமராஜ் - 101" பதிப்புகள் தொடரும் ]

நண்பர்களே ஒரு வேண்டுகோள், உங்களுக்கு பிடித்திருக்கும் பட்சத்தில், மறக்காமல் நட்சத்திரத்தில் ஓட்டு போடவும், உங்களின் ஓட்டு இப்பதிப்பை மேலும் பல வாசகர்களுக்கு எடுத்து செல்ல உதவும்.

Courtesy/Credit:
All credit for the information *absolutely* goes to those authors listed in the resources. My part in this, is nothing more than gathering those information from different sources and presenting is better format. These sources were immensely helpful and made possible this blog series.

Comments:
காமராஜர் .. அவரைப் பற்றி நிறைய தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. காமராஜர் திரைப்படத்தில் வரும் 'நாடு பார்த்ததுண்டா..' என்ற உருக்கும் பாடலை நினைவுகூர்கிறது உங்கள் பதிவுகள்..நிறைய எழுதுங்கள்..

காமராஜரின் படங்கள் கிடைத்தாலும் பதிவேற்றுங்களேன்..

இது நான் சில வருடங்களுக்கு முன்பு வரைந்தது.. உதவுமா என பாருங்கள்..http://pencilsketch.blogspot.com/2005/12/kamarajar.html

தொடர்ந்து எழுதுங்கள் புதியவர்கள் தெரிந்துகொள்ளட்டும் தெரிந்தவர்கள் நெகிழ்ந்துகொள்ளட்டும்..


புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
சுகா
 
நானும் படித்தேன் காமராஜர் அந்த பள்ளி திறக்கப்போகும் போது ஜீவாவை அழைத்தீர்களா?" என கேட்டதற்கு இல்லை யென அதிகாரிகள் சொல்ல தலைவரே நேரே ஜீவா வீட்டிற்கு சென்று அழைத்தார்
"வா காமராஜ் அமருங்கள்" என ஒரு ஸ்டூல் எடுத்துப்போட்டு உட்கார வைத்தார்
தலைவர்,"பக்கத்தில்பள்ளிகூடம் திறக்க வந்தேன் உங்களை அழைக்காமல் இருந்த செய்தியை நான் தெரிந்து கொண்டு நானே நேரில் வந்து உங்களை அழைக்கிறேன் வாருங்கள் என்றார் அவர் துணிகளை இப்போது தான் துவைத்துப் போட்டு விட்டு இந்த துண்டைக் கட்டிக்கொண்டு இருக்கிறேன் அது காய வேண்டாமா?" என கேட்க தலைவர் இரண்டு ஜோடி வேட்டி துண்டு சண்டை தனது உதவியாளரைஉடனடியாக வாங்கி வரச்சொல்லி அவர் உடுத்திய பின் நிகழ்ச்சிக்கு அழைத்துச் சென்றதாகப் படித்தேன்.
 
வாங்க சுகா, வருகைக்கும் புத்தாண்டு வாழ்திற்க்கும் நன்றி. உங்களுக்கும், நமது நண்பர்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள். உங்க ஸ்கெட்ச் பார்த்தேன், ரொம்ப நல்லா பண்ணியிறுகீங்க :). படம் போடனும்தான் நினைத்தேன், இப்போதைக்கு முடியல, மே பி, பின்னால பண்ணனும்.

என்னார் ... அசத்தல், உங்க தகவல் இன்னும் சுவாரஸ்யம் சேர்க்கிறது. உங்களை போல் காமராஜ் பற்றி மேலும் தெரிந்தவர்கள் வாசிப்பதால், இன்னும் கூடுதல் கவனத்துடன் எழுதனும்னு பொறுப்பு அதிகரிக்குது :)
 
Post a Comment



<< Home

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: ?????????.????-?? ????????????????, ????????????????

This page is powered by Blogger. Isn't yours?