Friday, December 29, 2006

--------

காமராஜ் - 101 [ # 2 ]

[ இது ஒரு மீள்பதிவு ]
தமிழகத்தில் ஆறுகளுக்கு பஞ்சமில்லை. சேர நாடும், எறுமை நாடும் (கன்னட நாடும்) தமிழ் நாடாக இருந்த பழங்காலத்திலேயே காவேரி, தென்பெண்ணை, பாலாறு, வைகை, பொருணை நதி என ஆறு பல ஓடியது. ஆனால் கரிகாலன் என்ற சோழமன்ணன் காவிரியின் குறுக்கே கட்டியது கல்லணை. அதன் பின் 1932-ல் பைகரா, அடுத்து 1937-ல் மேட்டுர், 1946-ல் பாபநாசம் நீர்மின் திட்டங்கள் செயற்படுத்தப்பட்டன.1952-ல் ராஜாஜி, சி.எஸ்,தேஷ்முக் முயற்சியில் கனடா நாட்டு உதவியால் நீலகிரி-குந்தா அணை பெறப்பட்டது.
அதனை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள அனைத்து அணைகளும் கட்டப்பட்டவை காமராஜரின் ஆட்சிக்காலத்தில் தான். மறக்க(டிக்க)ப்பட்ட அந்த நெடிய் பட்டிட்யலை பாருங்கள். (இதில், கால்வாய் மற்றும் ஏரி திட்டங்களையும் சேர்த்து தந்துள்ளேன்):

1. ரூ 5 கோடியில் மலம்புழா அணை - 46,000 ஏக்கர் பாசன வசதி
2. தாமிரபரணி குறுக்கே மணிமுத்தாறு அணை - 20,000 கூடுதல் பாசன வசதி
3. ரூ 3 கோடியில் அமராவதி அணை - 47,000 ஏக்கர் பாசன வசதி
4. ரூ 2.5 கோடியில் சாத்தனூர் அணை - 20,000 ஏக்கர் பாசன வசதி
5. ரூ 2.5 கோடியில் வைகை அணை - 20,000 ஏக்கர் பாசன வசதி
6. ரூ 1 கோடியில் வாலையார் அணை - 6,500 ஏக்கர் பாசன வசதி
7. ரூ 50 லட்சத்தில் மங்கலம் அணை - 6,000 ஏக்கர் பாசன வசதி
8. ரூ 1 கோடியில் ஆரணியாறு அணை - 1,100 ஏக்கர் பாசன வசதி
9. ரூ 2 கோடியில் கிருஷ்ணகிரி அணை - 7,500 ஏக்கர் பாசன வசதி
10. வீடுர் அணை.
11. (*) பரம்பிக்குளம் - ஆழியாறு அணைகள்.
12. ரூ 2.5 கோடியில் மேட்டூர் பாசன கால்வாய் - 45,000 ஏக்கர் பாசன வசதி
13. ரூ 30 லட்சத்தில் புதுபிக்கப்பட்ட காவிரி டெல்டா கால்வாய்கள்
14. ரூ 10 கோடியில் கீழ் பவானி திட்டம் - 2,00,000 ஏக்கர் பாசன வசதி
15. ரூ 1.5 கோடியில் மேல் கட்டளை கால்வாய் திட்டம் - 36,000 ஏக்கர் பாசன வசதி
16. ரூ 1.5 கோடியில் புள்ளம்பாடி திட்டம் - 22,000 ஏக்கர் பாசன வசதி
17. ரூ 1.5 கோடியில் மீனக்கரை ஏரித்திட்டம் - 4,000 ஏக்கர் பாசன வசதி
18. ரூ 75 லட்சத்தில் மணிமுக்தா நதித்திட்டம் - 4,000 ஏக்கர் பாசன வசதி
10. ரூ 75 லட்சத்தில் கோமுகி ஆற்றுத்திட்டம் - 8,000 ஏக்கர் பாசன வசதி
20. ரூ 75 லட்சத்தில் தோப்பியார் ஏரி - 2,500 ஏக்கர் பாசன வசதி

(*) அனைத்து அணைகளின் மணிமகுடம் பரம்பிக்குளம் - ஆழியாறு அணை, இது சுவாரஸ்யமான மற்றும் ஒரு technology-feet, தனியாக ஒரு நாள் விளக்குகிறேன் அதன் கதையை.

-------------------------------------------------------------------
பால்: பொருட்பால்

அதிகாரம்: (64) அமைச்சு

குறள்:
கருவியும், காலமும், செய்கையும், செய்யும்
அருவினையும் மாண்டது அமைச்சு.

பொருள்:
ஒரு செயலை செய்யத் தேவையான பொருள்கள், செய்வதற்கு
ஏற்ற காலம், செய்யும் முறை, செய்யும் செயல் ஆகிய
அனைத்திலும் நன்மை விளையும்படி எண்ணுபவரே அமைச்சர்.
------------------------------------------------------------------

- By: டண்டணக்கா
[ இந்த "காமராஜ் - 101" பதிப்புகள் தொடரும் ]

நண்பர்களே ஒரு வேண்டுகோள், உங்களுக்கு பிடித்திருக்கும் பட்சத்தில், மறக்காமல் நட்சத்திரத்தில் ஓட்டு போடவும், உங்களின் ஓட்டு இப்பதிப்பை மேலும் பல வாசகர்களுக்கு எடுத்து செல்ல உதவும்.

Courtesy/Credit:
All credit for the information *absolutely* goes to those authors listed in the resources. My part in this, is nothing more than gathering those information from different sources and presenting is better format. These sources were immensely helpful and made possible this blog series.

Thursday, December 28, 2006

--------

காமராஜ் - 101 [ # 1 ]

[ இது ஒரு மீள்பதிவு ]
தலைவர் (காமராஜ்) வழக்கம் போல தனது முன்அறையில் அமர்ந்து வந்தோரோடு அளவளாவியும், அனுப்பிக்கொண்டும் இருந்தார். நாங்கள் நால்வரும் (அரு.சங்கர், தனுஷ்கோடி, டி.எஸ்.டி.ராஜா, டி.ஏ.எம்.ஏ.மாரிமுத்து)முன்னேறி அறையில் இடம் பிடித்து விட்டோம்.அப்போது நாங்கள் சற்றும் எதிபாராத நிலையில் பதினெட்டு வயது இளைஞன் ஒருவன், மிக உரிமையுடன் தலைவர் முன் வந்து நின்றான்.அவன் கையில் ஒரு அச்சடிக்கப்பட்ட வெள்ளைதாளிருந்தது. "என்னடா கனகவேல், என்னா விஷயம்?...என்னது காகிதம்" கேட்டபடியே வாங்கி படித்தார்.இளைஞன் பேச ஆரம்பித்தான், "தாத்தா, எம்.பி.பி.எஸ்-க்கு அப்ளிகேசன் போட்டேன், இன்டர்வி நடந்திருச்சு, நீங்க சி.எம்-கிட்ட ஒரு வார்த்தை சொன்னீங்கனா இடம் கிடைச்சுரும், லிஸ்ட் போடுறதுக்குள்ள சொல்லுங்க தாத்தா, எங்க குடும்பத்துல நான் ஒருத்தனாவது படுச்சி டாக்டராகி விடுவேன்" என கெஞ்சுகிறான்.தலைவரின் பக்கவாட்டில் மிக அருகில் நின்றிருந்த எனக்கு தலைவரின் கையில் இருந்த அந்த தாளின் சில வாசகங்கள் சில தெளிவாக தெரிந்தன. அதில்...

C/O THIRU. K. KAMARAJ
ALL INDIA CONGRESS COMITTEE PRESIDENT
8,THIRUMALAI PILAI ST
MADRAS-17

என ஒரு கேள்விக்கு பதிலாக எழுதி இருந்தது. தலைவரின் அடுத்த கேள்வியும் அது பற்றியதாகவே இருந்தது..."ஆமா, என் பேரை எதுக்கு எழுதினே?""இல்ல தாத்தா, என் மெட்ராஸ் அட்ரஸ் கேட்டிருந்தாங்க, எனக்கு உங்களை தவிர இங்கே வேறுயாரையும் தெரியாதே...இன்டர்வியூவலயும் கேட்டாங்க...தாத்தான்னு சொன்னேன்". அந்த இளைஞன் யாரென்பது இப்போதுதான் எனக்கு புரிந்தது. காமராஜரின் ஒரே தங்கை திருமதி. நாகம்மாளின் மகள் வழி பேரன்."கனகவேலு, இந்த டாக்டர் படிப்பு, இன்ஞினியர் படிப்புக்கெல்லாம் அரசாங்கம் ஒரு கமிட்டி போட்டிருக்கும். அவுங்க தேர்ந்தெடுக்கிறவங்களுக்குத் தான் இடம் கிடைக்கும். எல்லாறுக்கும் பொதுவா கமிட்டியை போட்டுட்டு, பிறகு இவனுக்கு சீட் குடு, அவனக்கு சீட் குடுன்னு சிபாரிசு பண்றதுன்னா பிறகு அதுக்கு கமிட்டியே போட வேண்டியதில்லையே... நீ நல்லா பதில் சொல்லி இருந்தீன்னா உனக்கு கிடைக்கும். கிடைக்கலேன்னா பேசாம கோயமுத்தூரில் பி.எஸ்.சி அக்ரிகல்சர்னு ஒரு பாடம் இருக்கு, அதிலே சேர்ந்து படி... அந்த படிப்புக்கு நல்ல எதிர் காலம் இருக்கும். என்னால் சிபாரிசு பண்ண முடியாது" என்று சொல்லி அவன் தந்த தாளையும் அவனிடம் தந்து அனுப்பிவிட்டார். அவனை அனைவரும் அனுதாபத்தோடு பார்த்தனர். அந்த வருடம் அவனுக்கு மருத்துவ படிப்புக்கு அனுமதி கிடைக்கவில்லை.

-------------------------------------------------------------------
பால்: அறத்துப்பால்

அதிகாரம்: (12) நடுவு நிலைமை [சமநிலை போற்றல்)

குறள்:
சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்துஒருபால்
கோடாமை சான்றோர்க்கு அணி.

பொருள்:
முதலில் சமமாக நின்று, பிறகு தன்மீது வைக்கப்பட்ட பாரத்தை நிறுத்திக் காட்டும் தராசு போல, நீதிக்குரிய இலக்கணங்களால்
அமைந்து, ஒரம் சார்ந்து விடாமல் இருப்பது சான்றோர் அழகு.
-------------------------------------------------------------------


- By: டண்டணக்கா
[ இந்த "காமராஜ் - 101" பதிப்புகள் தொடரும் ]

நண்பர்களே ஒரு வேண்டுகோள், உங்களுக்கு பிடித்திருக்கும் பட்சத்தில், மறக்காமல் நட்சத்திரத்தில் ஓட்டு போடவும், உங்களின் ஓட்டு இப்பதிப்பை மேலும் பல வாசகர்களுக்கு எடுத்து செல்ல உதவும்.

Courtesy/Credit:
All credit for the information *absolutely* goes to those authors listed in the resources. My part in this, is nothing more than gathering those information from different sources and presenting is better format. These sources were immensely helpful and made possible this blog series.

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: ?????????.????-?? ????????????????, ????????????????

This page is powered by Blogger. Isn't yours?