Tuesday, March 21, 2006

--------

காமராஜ் - 101 [ # 27 ]

காமராஜரின் குணம் அவரின் பேச்சு, செயல் எல்லாவற்றிலுமே வெளிப்படும்.

வெளியூர் பொதுக்கூட்டம் ஒன்றில் முதலமைச்சர் காமராஜ் வருவதற்காகத் திரளான மக்கள் கூட்டம் காத்துக்கொண்டிருந்தது. மலர் மாலைகளோடு தொண்டர்களும், பிரமுகர்களும் இருப்பதை பார்த்த காமராஜ், " பேச்சு முன்னே மாலை பின்னே" என்று கூறிவிட்டார்.

அதற்க்கு காமராஜ் ஒரு காரணமும் சொன்னார். " பொதுமக்கள் நம் பேச்சை கேட்பதற்காகதான் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அதனால் முதலில் அவர்கள் நன்மைக்கானன விஷயங்களைப் பேசிவிட்டு பிறகு மாலை மரியாதையை ஏற்றுக் கொள்ளலாம் என்றார் பெருந்தன்மையோடு.

அதே போன்று மேடையில் அதிக வெளிச்சம், பொதுமக்கள் இருக்கும் பகுதியில் வெளிச்சம் குறைவாகவும் இருந்தால் கடிந்து கொள்வார். " மக்களை பார்க்கத்தான் வந்தேன். அவர்களது முக உணர்ச்சிகளைப் பார்த்தால்தான் நாம் செய்வது சரியா தவறா என்று தெரியவரும். எனவே விளக்குகளை அவர்களை பார்த்துத் திருப்புங்கள்" என்பார்.

-------------------------------------------------------------------
பால்: பொருட்பால்
அதிகாரம்: குடியியல்

குறள்:
எண்பதத்தால் எய்தல் எளிதுஎன்ப யார்மாட்டும்
பண்புவுடைமை என்னும் வழக்கு

பொருள்:
எவரிடத்தும் எளிமையாக நடந்து கொள்வதல்,
பண்புடைமையை எளிதாக அடையலாம் என்று
அறிஞர் கூறுவர்.
-------------------------------------------------------------------

- By: டண்டணக்கா
[ இந்த "காமராஜ் - 101" பதிப்புகள் தொடரும் ]

நண்பர்களே ஒரு வேண்டுகோள், உங்களுக்கு பிடித்திருக்கும் பட்சத்தில், மறக்காமல் ஓட்டு போடவும், உங்களின் ஓட்டு இப்பதிப்பை மேலும் பல வாசகர்களுக்கு எடுத்து செல்ல உதவும்.

Courtesy/Credit:
All credit for the information *absolutely* goes to those authors listed in the resources. My part in this, is nothing more than gathering those information from different sources and presenting is better format. These sources were immensely helpful and made possible this blog series.

Comments:
ஓட்டு போட்டாச்சு டண்! மக்களை பேசும் போது கூட பார்க்கணும்னு ஆசைப்படுற தலைவர்.இப்போ ஓட்டுப்போட்டு பதவி கெடைச்சாலும் அந்த பக்கமே எட்டிப்பாக்காத தலைவர்கள்.ம்ம்ம்ம்ம்
 
Post a Comment



<< Home

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: ?????????.????-?? ????????????????, ????????????????

This page is powered by Blogger. Isn't yours?