Thursday, March 16, 2006

--------

காமராஜ் - 101 [ # 23 ]

காமராஜரின் குரு சத்யமூர்த்தி. அவரின் புதல்வி லட்சுமி கிருஷ்ணமூர்த்தி, காமராஜ் பற்றி கூறியுள்ள நிகழ்வுகளில் ஒன்று.....

காமராஜ் தன்னை பற்றியோ, தன் வீட்டைப் பற்றியோ சிந்திப்பதே கிடையாது. இதற்கு ஒரு சம்பவத்தை என்னால் கூற முடியும்.

அவர் எங்கள் குடும்பம் மீது அளவு கடந்த அன்பும் பாசமும் வைத்திருந்தார். முதலைமைச்சராக இருந்த போது அவரும், நாங்களும் திருப்பதி கோயிலுக்கு சென்றிருந்தோம். திருப்பி வரும் போது ரேணிகுண்டாவில் புதைமணலில் காரின் டயர்கள் சிக்கிக் கொண்டது. கார் நகரவில்லை.

காரில் இருந்த காமராஜர் கீழே இறங்கி காரை தள்ளினார். முதல் அமைச்சராக இருந்த அவர் எந்தவித கவுரவமும் பார்க்காமல் காரை தள்ளியது எங்களுக்கு ஆச்சரியமாக இருந்தது.

எங்கள் தந்தையை குருவாக மதித்து அந்த குருவுக்கு பெருமையும் புகழும் சேர்த்த முதன்மை சிஷ்யராகவே காமராஜர் வாழ்ந்து மறைந்தார்.

-------------------------------------------------------------------
பால்: பொருட்பால்
அதிகாரம்: சான்றான்மை (99)

குறள்:
ஊழி பெயரினும் தாம்பெயரார், சார்றாண்மைக்கு
ஆழி எனப்படு வார்

பொருள்:
சான்றான்மை எனப்படும் கடலுக்கு கரை எனப்படும் சான்றோர், காலம் மாறினாலும் தான் மாறமாட்டார்.
-------------------------------------------------------------------

- By: டண்டணக்கா
[ இந்த "காமராஜ் - 101" பதிப்புகள் தொடரும் ]

நண்பர்களே ஒரு வேண்டுகோள், உங்களுக்கு பிடித்திருக்கும் பட்சத்தில், மறக்காமல் ஓட்டு போடவும், உங்களின் ஓட்டு இப்பதிப்பை மேலும் பல வாசகர்களுக்கு எடுத்து செல்ல உதவும்.

Courtesy/Credit:
All credit for the information *absolutely* goes to those authors listed in the resources. My part in this, is nothing more than gathering those information from different sources and presenting is better format. These sources were immensely helpful and made possible this blog series.

Comments:
எல்லா சம்பவங்களும் நம் கண்முன்னாடி வந்து நின்று நம்மை ஏங்க வைக்கிறது டண். நன்றி.
 
வாங்க சிவம், வருகைக்கு நன்றி.

சிவா, வாங்க...
 
Post a Comment



<< Home

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: ?????????.????-?? ????????????????, ????????????????

This page is powered by Blogger. Isn't yours?